Friday, April 16, 2010

கிறுக்கியது Kavithai!

நீண்ட நெடுங்காலம் கழித்து மீண்டும் ...
நான் ...
கிறுக்கியது கவிதை! (trademark coming soon:)

வாசித்துப் பாருங்களேன்!!

--------------------------------------------------
இறப்பு வரைதான் இருப்பு!
இந்த இருப்பில் எதற்கு எடுப்பு?

வருகையில் என்ன கொணர்ந்தாய்?
போகையில் எதைக் கொண்டு போவாய்?

இரு வினாக்களிற்கும் விடை ஒன்றுதான்
இதில் இருப்பது உண்மை ஒன்றுதான்

வென்றவர் யார் தோற்றவர் யார்
நீண்டு நிலைத்து நிற்பவர் யார்

முதலில் வந்தவர் யார்? பிறகு சென்றவர் யார்?
கண்டு பிடித்ததெல்லாம் சொல்பவர் யார்?

தாய் தின்ற நிலமே விண்
கலம் சென்ற நிலவே

நீங்களும் நாங்களும் புள்ளிதான் - மிகச் சின்னப் புள்ளிகள் தான்
பிரபஞ்சமோ பெரிய புள்ளிதான்!

நட்பும் காதலும் நடிக்கலாம்
பந்தங்கள் பிணைப்புகள் வெடிக்கலாம்

அசந்து தூங்குபவன் எழுப்பப் படலாம்
நடிப்புத் தூக்கம் கலைய நாளாகும்

சிறு துரும்பும் பல் குத்த உதவும்
சிறு துளிகள் சேர்ந்தே பெரு மழை

உன்னை உணர்ந்தால் இந்த உண்மை புரிந்தால்
உள்ளவரை நீ சிரிக்கலாம் உலகையும் எதிர்த்து நிற்கலாம்

16 April 2010

1 comment: